For Daily Alerts
Just In
பாக். மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற கோருகிறது பா.ஜ.க.
டெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேலும்தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரும் முடிவை இன்று (சனிக்கிழமை)கூடும் பாஜக செயற்குழு அறிவிக்கவுள்ளது.
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைத் தாக்க வேண்டும் என்று பாஜகசார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாக அக்கட்சித் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி நேற்றுகூறினார்.
ஆனால் எப்போது தாக்க வேண்டும் என்பது பற்றி அரசே முடிவெடுக்கும் என்றும் ஜனா கூறினார்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு இன்றுதான் பாஜகவின் தேசிய செயற்குழு கூடுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]