காஷ்மீர் எல்லையில் நிலக்கண்ணி வெடித்து 18 பயிற்சி வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஜெய்சால்மர்:
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது 18 ராணுவ வீரர்கள் நிலக்கண்ணிகள்வெடித்ததில் கொல்லப்பட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று நிலக்கண்ணிகள் வெடித்துச் சிதறின. இச்சம்பவத்தில் பயிற்சியில்ஈடுபட்டிருந்த 18 ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த வெடிச் சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சத்தத்தைக் கேட்டஅருகில் உள்ள கிராம மக்களிடையே பெரும் பீதி கிளம்பியது. எல்லையில் போர் ஆரம்பித்து விட்டதோ என்றுஅம்மக்கள் அஞ்சினார்கள்.
எல்லையில் உள்ள லோங்கோவால் மற்றும் சாடேவாலா பகுதியில் இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications