For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் கள்ள நோட்டு கும்பல் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாம்பலத்தில் உள்ள நகைக் கடையில் கள்ள நோட்டுகளை கொடுத்து நகை வாங்க முயன்ற ஒருவர்பிடிபட்டார். அவரது கும்பலையும் கைது செய்து, ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை மாம்பலத்தில் கள்ள நோட்டுகளை கொடுத்து நகைக்கடையில் நகை வாங்க ஒரு கும்பல் வந்துள்ளதாகபோலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில்ஈடுபட்டனர்.

சம்பவத்தன்று பகலில் தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் சுமார் ரூ.51,000 மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு அதற்கு கள்ள நோட்டுகளை கொடுத்த நங்கநல்லூரை சேர்ந்த நாகராஜன் (40) என்பவரை போலீசார்கைது செய்து விசாரித்தனர்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த இஸ்மாயில் (32), மவுண்ட்ரோடு ரகுமான்(58) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கள்ள நோட்டுகளைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பல் பல இடங்களில் குற்றங்கள் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களின் கூட்டாளிகள்கேரளாவிலும், மும்பையிலும் உள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X