இன்டர்நெட்டில் விபச்சாரம்: சென்னை டாக்டர் கைது
சென்னை:
இன்டர்நெட் விபச்சாரம் நடத்திய செக்ஸ் டாக்டர் பிரகாசை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னைசைதாப்பேட்டை கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை அண்ணா நகர் 3வது மெயின் ரோட்டில் மருத்துவமனை நடத்தி வந்த பிரபல எலும்பு முறிவு சிகிச்சைநிபுணர் டாக்டர் பிரகாஷ்.
இவரது மருத்துவமனைக்கு வரும் பெண்களை மிரட்டி ஆபாசம் படம் எடுத்துள்ளார். மேலும் இவரதுமருத்துவமனைக்கு தொலைக்காட்சி நடிகைகளும் வருவர். இவர்களையும் வைத்து இவர் ஆபாசம் படம்எடுத்துள்ளார்.
இவர் தயாரித்த ஆபாச படங்கள் இன்டர்நெட் மற்றும் உலகம் முழுவதும் சர்வதேச அளவில் உலா வந்தது. இதன்மூலம் அவர் கோடி, கோடியாக சம்பாதித்து உள்ளார்.
இவர் எடுத்த ஆபாச படங்களை அமெரிக்காவில் உள்ள இவரது தம்பியின் முலம் இன்டர்நெட்டில் காட்டியுள்ளார்.மேலும் சென்னையில் உள்ள சில இன்டர்நெட் நிறுவனங்களுடன் அவர் தொடர்பு வைத்திருப்பதாகவும்சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் இவர் இரண்டு தினங்களுக்கு முன்னால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
இவரை போலீசார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜர் படுத்தினர். இவரை5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி விஜயகாந்த் உத்தரவிட்டார்.
சென்னை துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள்அமைக்கப்பட்டு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications