இந்திய நடவடிக்கைகளுக்கு புஷ் ஆதரவு
வாஷிங்டன்:
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்த புஷ், இந்தியாவின் ஜனநாயகத்துக்கேஎதிரான தாக்குதல் இது என்றும் கூறினார்.
ஆனாலும் எல்லைப் பகுதிகளில் போர் உருவாகும் அபாயத்தைத் தவிர்க்குமாறும் அவர் வாஜ்பாயைக் கேட்டுக்கொண்டார்.
போரைத் தவிர்ப்பதற்காக முடிந்த அளவு முயற்சிப்போம் என்று ஏற்கனவே வாஜ்பாய் கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
முஷாரப்புடனும் புஷ் பேச்சு:
வாஜ்பாயுடன் பேசிய கையோடு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடனும் டெலிபோனில் புஷ் பேசினார்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளின் மீது உடனடியாக கடுமையானநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புஷ் அப்போது முஷாரப்பைக் கேட்டுக் கொண்டார்.
இதன்மூலம் இந்தியாவிற்கு எதிரான போரைத் தவிர்க்குமாறும் முஷாரப்பிடம் புஷ் வலியுறுத்தினார்.
இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்காலின் பாவெல்லும் நேற்று டெலிபோனில் பேசினார். இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும்அசாதாரணமான சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர்.












Click it and Unblock the Notifications