துண்டான 5 கை விரல்கள் ஆபரேஷன் மூலம் ஒட்டவைப்பு: கோவை மருத்துவர்கள் சாதனை
கோயம்புத்தூர்:
ஒருவருடைய துண்டான 5 கை விரல்களையும் மீண்டும் ஒட்ட வைத்து கோயம்புத்தூர் மருத்துவர்கள் சாதனைபுரிந்துள்ளனர்.
கடந்த 7ம் தேதி சிவகாசியைச் சேர்ந்த 24 வாலிபர் ஒருவர் தன் அச்சகத்தில் உள்ள மெஷினில் தெரியாமல் இடதுகையை நுழைத்ததால் அவருடைய 5 விரல்களும் துண்டாகி விட்டன.
மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் துண்டான விரல்களுடன் அந்த வாலிபர் உடனடியாகச்சேர்க்கப்பட்டார். அவருக்கு முதுலுதவி செய்த டாக்டர்கள், பின்னர் விரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரைகோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் அந்த வாலிபர் சேர்க்கப்பட்டார். மறுநாளே டாக்டர் ராஜாசபாபதி தலைமையில் அவருக்கு விரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
அவ்வாலிபரின் கைவிரல் எலும்புகள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வயர்கள் மூலம் இணைக்கப்பட்டன. சுமார் 17 மணிநேரம் நடந்த இந்த அறுவைச் சிகிச்சையின்போது அவருடைய கை விரல்களின் தசை நார்களும் விரல்களும்ஒட்டப்பட்டன.
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து 3 வாரங்கள் ஆன நிலையில் அந்த வாலிபர் விரைவாகத்தேறிவருகிறார்.
அடுத்த 6 முதல் 9வது மாதத்தில் அந்த வாலிபரால் பழையபடி தன்னுடைய இடது கை விரல்களைப் பயன்படுத்தமுடியும் என்று டாக்டர் ராஜா சபாபதி கூறினார்.