காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி
ஜம்மு:
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளின் இந்தத் திடீர்த் தாக்குதலில் அந்த வீட்டிலிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.பின்னர் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்றிரவு ரஜவுரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி பகுதியில் உள்ள மோரா பாய் என்ற கிராமத்தில் 6வீடுகள் மற்றும் ஒரு அரசு பள்ளிக்கூடத்தின் மீது தீவிரவாதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் வீடுகளும், பள்ளியும் முழுவதும் தீக்கிரையாகிவிட்டது.
ராணுவமும், போலீசாரும் சேர்ந்து இந்த தாக்குதல்களுக்குக் காரணமான தீவிரவாதிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதற்கிடையே எல்லையில் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்யும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,அவை வெடித்ததில் இன்றும் ஒரு ராணுவ வீரர் உடல் சிதறி உயிரிழந்தார். வேறு 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது நேற்றும் 18 வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.