நக்கீரன் நிருபரை விடுவிக்க நிருபர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை விடுதலை செய்யக் கோரி சென்னையில் நிருபர்கள் உண்ணாவிரதம்இருந்தனர்.
கர்நாடகப் போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியத்திடம் தற்போது தமிழக போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
அவர் மேல் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவரை விடுதலை செய்யக் கோரி சென்னையில்நேற்று (சனிக்கிழமை) பத்திரிக்கை நிருபர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
"நிருபர் சிவசுப்பிரமணியம் பாதுகாப்புக் குழு"வின் அமைப்பாளர் சிகாமணி இந்த உண்ணாவிரதப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
நக்கீரன் கோபால் உள்பட பல பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்,பிரபல நடிகையும் சமூக சேவகியுமான ரேவதியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications