அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது: வாசன்
கிருஷ்ணகிரி:
நாங்கள் மதச்சார்பற்ற கூட்டணியான அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம், தொடர்ந்து நீடிப்போம் என்று தமாகாதலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமாகா கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜ்யசபா இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மைத்ரேயன் போட்டியிடுவதற்கு எனது வாழ்த்துக்கள். அதிமுகவில்147 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதனால் அவர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்துநாங்கள் ஒன்றும் அதிமுகவுடன் கேட்கவும் இல்லை.
எங்கள் கட்சியிலிருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு தாவப்போவதாக சொல்கிறார்கள். அதிமுக எங்கள்கட்சியை உடைக்க முயற்சிக்கவில்லை. அது தவறான செய்தி. எங்கள் கட்சி கட்டு கோப்பான இயக்கம். யாராலும்உடைக்க முடியாது.
நாங்கள் மதசார்பற்ற கூட்டணியான அதிமுகவில் நீடிக்கிறோம். தொடர்ந்து நீடிப்போம். ஆனால் மக்கள் பிரச்சனைஎன்றால் அதிமுக அரசை எதிர்த்து குரல் கொடுப்போம்.
கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் தெரிவிப்போம்என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications