7வது முறையாக இன்று மீண்டும் பாதுகாப்பு கமிட்டி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
எல்லையில் நிலவிவரும் பதற்ற நிலை பற்றி விவாதிப்பதற்காக மத்திய பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம் இன்று(திங்கள்கிழமை) பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற உள்ளது.
ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மாநில எல்லைகளில் குவிக்கப்பட்டு வரும் ராணுவத்தினரை நேரில் சந்தித்து ஆய்வுசெய்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விளக்கமளிக்கஉள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் ராணுவத்தைக் குவிக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது.
வடக்கு எல்லைப் பகுதிகளில் சீனா தன் படையினரைக் குவித்து வருவதாகக் கூறப்பட்டதையடுத்து, அந்தஎல்லையிலும் ராணுவத்தினரைக் குவிப்பது பற்றியும் விரைவில் மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது.
ஆனால் தன் படைகள் இந்திய எல்லையில் குவிக்கப்படவில்லை என்று சீனா ஏற்கனவே மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications