சீன எல்லையிலிருந்து பாக். எல்லைக்கு நகரும் இந்திய ராணுவம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அசாம் மாநிலத்தில் சீன எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவப் படைகளை பாகிஸ்தான் எல்லையில் குவிக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அசாமில் உள்ள சீன எல்லைப் பகுதியில் "தேர்ட் கார்ப்ஸ்" என்ற படையினர் காவல் காத்து வருகின்றனர்.
தற்போது இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு வருவதையடுத்து, "தேர்ட் கார்ப்ஸ்" படையினர்பாகிஸ்தான் எல்லையை நோக்கி அனுப்பப்பட உள்ளனர்.
எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழ்நிலையில், பிரதமர் வாஜ்பாய் தலைமையில்பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் சுட்டதில் 2 ராணுவ வீரர்கள் பலி:
இந்நிலையில் எல்லைப் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் படையினருக்கிடையே நடந்து வரும் கடும் துப்பாக்கிச்சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications