For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜகோபால் விவகாரம்: கிருத்திகா தற்கொலை முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சரவணபவன் ஹோட்டல் அதிபரின் இரண்டாவது மனைவி கிருத்திகா, தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கிவிழுந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த ராஜகோபால்,நீதிமன்ற அனுமதியுடன் சில நாட்களுக்கு முன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கிருத்திகா நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரைராஜகோபால் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தூக்க மாத்திரைகள் அதிகமாக சாப்பிட்டதால் தான் கிருத்திகாவுக்கு மயக்கம் ஏற்பட்டது என்று டாக்டர்கள்தெரிவித்தனர். சிகிச்சையில் தேறிய கிருத்திகாவை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்குமாற்றப்பட்டார்.

தற்போது அடுத்தடுத்த அறையில் ராஜகோபாலும், கிருத்திகாவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை சந்தித்து பேசுவதற்காகவே அவர் தூக்க மாத்திரைசாப்பிட்டு விட்டு நாடகமாடுகிறாரா என்று போலீசார் சந்தேகித்து விசாரித்து வருகின்றனர்.

கிருத்திகாவை மருத்துவமனையில் ராஜகோபால் சந்தித்து பேசியதாகவும் மருத்துவமனை ஊழியர்கள்தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X