எல்லை சண்டையில் மேட்டூர் ராணுவ வீரர் மரணம்
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் மேட்டூரை சேர்ந்த வீரர் அண்ணா (29)வீர மரணம் அடைந்தார்.
இந்த மோதலில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த அண்ணா வீர மரணம் அடைந்தார். இவர் மேட்டூர் மேஸ்திரிகுவாட்ரஸ் தங்கவேல் என்பவரின் மகன்.
தற்போது அவரது குடும்பத்தினர் கோயம்புத்தூர் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கின்றனர்.நேற்று இரவு பெங்களூர் வந்து சேர்ந்த அவருடைய உடல், இன்று காலை 9.30 மணிக்குபெரியநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இவர் 3 ஆண்டுகளுக்கு முன் லாவண்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இப்போதுஇவருக்கு ஜெகதீசன் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறான்.












Click it and Unblock the Notifications