எம்.எல்.ஏக்களை இழுக்க அதிமுக முயற்சி: ஜனாதிபதியிடம் புகார் செய்ய பாமக முடிவு
சென்னை:
பாமக எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் அதிமுக தொடர்ந்து ஈடுபட்டால் ஜனாதிபதியிடம் புகார்செய்வோம் என்று பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இது பற்றி ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:
பாமக எம்.எல்.ஏ. சிவகாமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழககவர்னர், அத்வானி, சபாநாயகர் பாலயோகி, இந்திய தேர்தல் கமிஷனர், சிபிஐ இயக்குனரிடம் மனுகொடுத்துள்ளோம்.
இருந்தாலும் அதிமுகவினர் பாமக எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாமகமட்டுமல்லாமல் திமுக, காங்கிரஸ் கட்சிகளை உடைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாமக எம்.எல்.ஏ.க்களை அதிமுகவினர் தொடர்ந்து இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டால் எங்கள் கட்சி எம்.பி.க்கள்மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதியை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுக்க இருக்கிறோம்.
இது பற்றி பொதுமக்களிடம் விளக்குவதற்காக போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்.
பாமக செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறஉள்ளது. அங்கு நிர்வாகிகள் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது பற்றி முடிவு செய்வோம் என்று மணிகூறினார்.