சார்க் மாநாடு: வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் ஜனவரி 4ம் தேதி துவங்கவிருக்கும் சார்க் மாநாட்டின்போது பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பைஇந்தியப் பிரதமர் வாஜ்பாய் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாகக்கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, ஏற்கனவேதிட்டமிட்டபடி வாஜ்பாய் ஜனவரி 3ம் தேதி காட்மாண்டுவில் இருப்பார் என்று மட்டும் அவர் கூறினார்.
காட்மாண்டுவில் வாஜ்பாயும் முஷாரப்பும் ஒரே ஓட்டலில்தான் தங்கப் போகிறார்கள் என்றாலும், அவர்கள்இருவரும் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பே இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கனவேஅறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications