சென்னை: வேலை கிடைக்காததால் 2 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வேலை கிடைக்காத காரணத்தால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் மனோகர். இவருக்கு வயது 39. நீண்ட காலமாக வேலை தேடி வந்தார்.ஆனால் வேலை கிடைத்தபாடில்லை.
இதனால் மன வருத்தமடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது வீட்டில் தூக்கில் தொங்கிஇறந்தார்.
இதேபோல மற்றொரு நபரும் வேலை கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவர்நீண்ட காலமாக வேலை பார்த்து வந்தவர்.
துரைப்பாக்கத்தைச் சேர்ந்த இந்த நபரின் பெயர் ஜெகதீஷ். இவருக்கு வயது 50.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் தனது தீராத குடிப்பழக்கத்தால் வேலையிழந்தார்.
இதையடுத்து மனைவி, 2 குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டார். வேலை தேடியும்கிடைக்கவில்லை.
இதையடுத்து தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் ஜெகதீஷ்.












Click it and Unblock the Notifications