டான்சி வழக்கு: அப்பீல் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டுமனு மீதான விசாரணை குளிர்கால விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும்.
சென்னை உயர் நீதிமன்றம் டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த 4ம் தேதி தீர்ப்புவழங்கி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி என்பவர் சிறப்பு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் கடந்தவாரம் தாக்கல் செய்தார்.
சென்னை வழக்கறிஞரான சண்முக சுந்தரம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில் டான்சி நிலம் அரசுக்குசொந்தமானது தான் என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகக் கூறியுள்ளார் பாரதி.
உச்ச நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறை முடிந்த பிறகு இந்த மனு மீதான விசாரணை தொடங்கும் என்றுகூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications