காஷ்மீரில் இந்திய ராணுவம் சுட்டு 8 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்:
ஸ்ரீநகருக்கு அருகே தேர்போரா பகுதியில் இன்று (திங்கள்கிழமை) காலை இந்திய ராணுவத்தினர் சுட்டதில்லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சுமார் 15 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டை இன்று காலைதான் முடிந்தது.
கொல்லப்பட்ட ஒரு தீவிரவாதியிடமிருந்து சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் புகைப்படமும்சிக்கியுள்ளது.
நவ்ஷேரா மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும் மோர்ட்டார் ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பயங்கரமான சண்டைநடந்து வருகிறது.
தீவிரவாதிகள் தாக்கி 7 இந்திய வீரர்கள் காயம்
இதற்கிடையே காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர்த்தாக்குதலில் 7 இந்திய வீரர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலின்போது கிரினேட் எனப்படும் கையெறி குண்டுகளையே பெரும்பாலும் தீவிரவாதிகள்பயன்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications