புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
சென்னை:
2001ம் ஆண்டுக்கு விடைகொடுக்க இன்று (திங்கள்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சென்னை நகர சாலைகள்,கடற்கரைகளில் கூடுவோர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசென்னை மாநகர போலீஸ் எச்சரித்துள்ளது.
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு நேரத்தில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்களின்கொண்டாட்டம் ஆர்ப்பரிக்கும்.
இதனால் சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள், அடிதடிகளும் நடப்பதுண்டு.
இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக புத்தாண்டு தினத்தன்று போலீஸார் கடும் பாதுகாப்பையும்,கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு 12 மணியளவில் சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாடுவோர், புத்தாண்டு வாழ்த்துத்தெரிவிப்போர் அத்துமீறி நடக்கக் கூடாது என்றும், மீறி நடந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும்போலீஸார் எச்சரித்துள்ளனர்.
சங்கிலிப் பறிப்பு, வேகமாக வண்டிகளை ஓட்டுதல், ஈவ் டீசிங் போன்றவற்றைத் தடுக்க போலீஸார் உஷார்நிலையில இருப்பார்கள் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கியப் பகுதிகளான அண்ணா சாலை, மெரீனா கடற்கரை சாலை, தியாகாராய நகர் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications