மாஜி அதிமுக எம்.எல்.ஏ. எங்கே? - திமுகவினர் சாலை மறியல்
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், தற்போது திமுகவில் இருப்பவருமான எம்.கே. பாலனை சி.பி.சி.ஐ.டி.போலீசார்தான் பிடித்து வைத்துள்ளனர் என்று கூறும் திமுகவினர் அவரை விடுவிக்குமாறு மந்தைவெளியில் இன்று(செவ்வாய்க்கிழமை) சாலை மறியல் நடத்தினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வாக்கிங் சென்ற பாலன் இன்று வரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரதுமகன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர். ஆனால்சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதை மறுத்துள்ளனர்.
இதை நம்பாத திமுகவினர் இன்று காலை சென்னை-மந்தைவெளியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சி.பி.சி.ஐ.டி.போலீஸிடமிருந்து பாலனை விடுவிக்குமாறு கோஷமிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. அங்குள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் பாலனின் மகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
என் தந்தை நேற்று முன்தினம் வாக்கிங் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார்கைது செய்து வைத்துள்ளனர். அவரை விடுவிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications