For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த தியாகத்திற்கும் தயாராக இருங்கள்: வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தீவிரவாதத்திற்கு எதிராக நாம் நீண்ட போர் புரிய வேண்டியிருக்கும், அதனால் ஒவ்வொரு இந்தியனும் எந்ததியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நீடிக்கிறது.

இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி வாஜ்பாய்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு பல சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் குஜராத்மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பமும், ஆண்டின் நிறைவில் நாடாளுமன்றம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலும்குறிப்பிடத்தக்கவை.

நாம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் முலம் நம் முன் எதிர்வரும் எல்லாவிதமான சவால்களையும் இந்த புதியவருடத்தில் சந்திப்போம்.

பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அங்கு உள்ள இந்திய எதிர்ப்பு சக்திகளை பயன்படுத்திபயங்கரவாதத்தையும், மத தீவிரவாதத்தையும் கருவிகளாக கொண்டு நமது நாட்டில் பிரிவினைவாதத்தை கொண்டுவர முயல்கின்றனர்.

இதனால் போர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியா போரை விரும்பவில்லை. எப்படிப்பட்டசந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள நாம் ஒவ்வொருவரும் தயராக இருக்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் நீண்ட நெடியதாக இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும்உணர வேண்டும். ராணுவ வீரர்களை போல் பல தியாகங்களை செய்ய நாட்டு மக்கள் முன் வர வேண்டும்.

பயங்கரவாதத்தை நாம் வெற்றி கொள்வோம். இது ஒவ்வொரு இந்தியனின் புது வருடஉறுதி மொழியாக இருக்கவேண்டும் என்று வாஜ்பாய் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X