அந்தமானில் இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு
திருச்சி:
பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்தமான் தீவுகளுக்குள் ஊடுருவலாம் என்று கருதப்படுவதால், திருச்சியில் இருந்து250 ராணுவ வீரர்கள் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இந்தியாவும்பாகிஸ்தானும் தங்கள் எல்லையில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டுவருகின்றனர்.
மலேசியா எல்லைப்பகுதி வழியாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவாமல்தடுக்க திருச்சியிலிருந்து சிறப்பு ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் உள்ள 117வது மண்டலத்தைச் சேர்ந்த 250 ராணுவ வீரர்கள் சென்னையிலிருந்து கப்பல் மூலம்அந்தமானுக்குச் சென்றனர்.












Click it and Unblock the Notifications