வீரப்பன் காட்டில் துப்பாக்கிச் சண்டை: அதிரடிப்படை சுட்டதில் ஆதிவாசி பலி
கோயம்புத்தூர்:
ஆனைக்கட்டி வனப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மர்மக்கும்பலைச் சேர்ந்த ஆதிவாசி ஒருவன்அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சந்தன கடத்தல் வீரப்பனின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆனைகட்டி, சிறுவாணி, மதுக்கரை, பில்லூர் உள்ளிட்டமேலும் சில வனப்பகுதிகளில் தமிழக அதிரடிப் போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி, மாங்கரை வனப்பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2மணியளவில் தமிழக அதிரடிப்படையினர் முகாமிட்டிருந்தனர்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் பதுங்கியபடி நடந்து சென்றுகொண்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் அக்கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர்.
அப்போது அந்த கும்பல் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். அதிரடிப்படையினரும் திருப்பி சரமாரியாகசுட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் சுமார் 50 வயதுடைய ஆதிவாசி இறந்து விழுந்தார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.இவரிடமிருந்து சிங்கிள் பேரல் மசில் லோடு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது.
இந்த ஆதிவாசி வீரப்பன் கும்பலை சேர்ந்தவனா, கடத்தல் கும்பலை சேர்ந்தவனா என்று அதிரடிப் போலீசார்விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications