கம்ப்யூட்டர் மயமாகிறது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 5 கோடி செலவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர்பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாவட்ட நீதிபதிகளுக்கான புத்தொளி பயிற்சி வகுப்பு புதன்கிழமை துவங்கியது. இந்தப் பயிலரங்கைஉயர்நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் துவக்கி வைத்தார். நிதியமைச்சர் பொன்னையன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபேசுகையில்,
சென்னை உயர்நீதிமன்றம் முழுவதும் ரூ.5 கோடி செலவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இதற்காக தேசிய தகவல்மையத்தின் உதவி கோரப்படும்.
நீதிமன்றம் தவிர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் வீடுகளுக்கும் இந்தத் திட்டம்விரிவுபடுத்தப்படும் என்றார் பொன்னையன்.
நீதிபதி தாமஸ் பேசுகையில், வழக்குகளை விரைவாக முடிக்க நீதிமன்றங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுவதுஅவசியம் என்றார்.
10 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் 29 மாவட்ட நீதிபதிகள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications