கீழக்கரையில் ஒரே நாளில் 47 முஸ்லிம் ஜோடிகளுக்குத் திருமணம்
ராமநாதபுரம்:
கீழக்கரையில் ஒரே நாள் இரவில் 47 முஸ்லிம் திருமணங்கள் நடந்தன.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரையில் அதிக அளவில் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்களில்பெருமளவு வெளிநாடுகளிலும், வெளிமாவட்டங்களிலும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஊர் முஸ்லிம்கள் பல ஆண்டு காலமாக திருமணங்களை டிசம்பரில் தான் நடத்துவது வழக்கம். இந்த முறைஒரே நாளில் விடிய விடிய 47 முஸ்லிம் ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது.
சாலைகளில் இந்த ஜோடிகளின் திருமண ஊர்வலம் நடைபெற்றதால் போக்குவரத்து தடைபட்டது. ஒவ்வொருதெருக்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக நின்றன.
ஒரே தெருவில் பல்வேறு திருமணங்கள் நடைபெற்றதால் திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வந்தவர்கள்திருமண வீட்டைக் கண்டு பிடிக்காமல் திண்டாடினர்.
பெரும்பாலும் எல்லா தெருக்களிலும் திருமணங்கள் நடை பெற்றதால் தெருக்கள் முழுவதும் டியூப்லைட்டுகளாகவும், மின் அலங்கார தோரணங்களாகவும் காட்சியளித்தன.












Click it and Unblock the Notifications