ரேஷன் கார்டு கணக்கெடுப்பு பணி துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கான கண்ககெடுக்கும் பணி நேற்று (செவ்வாய்க்கிழமை)முதல் துவங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் புதியதாக ரேஷன் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு பச்சை நிறத்திலும், வறுமைக் கோட்டுக்கு மேலேஉள்ளவர்களுக்கு நீல நிறத்திலும் புதிய ரேஷன் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. ஆசிரியர்கள், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள்உட்பட தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் ஊழியர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஊழியர்கள் வீட்டில் உள்ளவர்களின் விவரங்களை அறிந்து கொண்டு, குடும்பத் தலைவரிடம்கையெழுத்தையும் போட்டோவையும் பெறுவர்.












Click it and Unblock the Notifications