சென்னையில் மின்சார ரயில் மோதி தம்பதி, குழந்தை பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மின்சார ரயில் மோதி கணவன், மனைவி அவர்களது குழந்தை ஆகியோர் பரிதாபமாக பலியாயினர்.

கொருக்குப் பேட்டையைச் சேர்ந்தவர் ராம் மோகன் (33). ஆங்கிலப் புத்தண்டையொட்டி செவ்வாய்க்கிழமைகாலை தனது மனைவி அமுதா (29), குழந்தைகள் பவித்ரா (8), கவிபாரதி (5) ஆகியோருடன் சோளிங்கரில் உள்ளகோவிலுக்குச் செல்ல கிளம்பினார்கள்.

பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக அவர்கள் வந்தனர். தண்டவாளத்தைக் கடந்துபிளாட்பாரத்தில் ஏற அவர்கள் நடந்தனர்.

அப்போது ரயில் வருவதை அவர்கள் பார்க்கவில்லை. இந்த நிலையில் திருத்தணியிலிருந்து வந்து கொண்டிருந்தரயில் அவர்களை நெருங்கியது. அப்போதுதான் ராம் மோகன் ரயிலைக் கவனித்தார்.

இதையடுத்து தனது கையிலிருந்து பவித்ராவை தூக்கி பிளாட்பாரத்தில் வீசினார். அதேபோல பாரதியையும் வீசமுயன்றார். ஆனால் அதற்குள் ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அமுதா பல துண்டுகளாக சிதறி உயிரிழந்தார். ராம் மோகனும், பாரதியும் படுகாயமடைந்து உயிருக்குப்போராடினர்.

அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+