காஷ்மீரில் அமைச்சர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் அரசு சிறுபான்மை மக்களுக்கு சரியான பாதுகாப்பு தரவில்லை என்று அமைச்சர்கள் மேல் கல்லெறிநடத்தப்பட்டது.
இந்த இடத்தைப் பார்க்க காஷ்மீர் உள்துறை அமைச்சர் நஜீப் சுகர்வர்தி, கிராம வளர்ச்சி அமைச்சர் அஜய்சந்தோத்ரா, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹர்பன்ஸ் சிங், சமூகநலத்துறை அமைச்சர் புகாரி ஆகியோர்சென்றனர்.
கீதாபவன் பகுதியில் அமைச்சர்கள் மற்றும் நகர அதிகாரிகள் வாகனம் சென்ற போது அங்கு கூடியிருந்த மக்கள்அவர்கள் வாகனத்தின் மீது கல்லெறிந்தனர். அதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே அங்கிருந்து அதிகாரிகளும், அமைச்சர்களும் உடனே திரும்பி சென்று விட்டனர். இந்தக் கல்வீச்சில்அமைச்சர்களின் பாதுகாப்புக்கு வந்தவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
அந்த பகுதி மக்களுக்கு தீவிரவாதிகளிடமிருந்து சரியான பாதுகாப்பு வழங்காததால் எஸ்.எஸ்.பி. கமல் சானி மீதுநடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்போது அந்த பகுதி கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இது சம்பந்தமாக யாரையும் போலீஸ் அதிகாரிகள்கைது செய்யவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.