திண்டுக்கல்லில் வீட்டுக்குள் பஸ் புகுந்து ஒருவர் சாவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் பஸ் புகுந்ததால் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, ஈரோட்டிற்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்ஸைஅறந்தாங்கியை சேர்ந்த குமார் (35) என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தபோது ஒரு சிறுமி ரோட்டைகடக்க முயன்றாள். அதை பார்த்த டிரைவர் அந்த சிறுமி மீது மோதாமல் இருக்க பஸ்ஸை ரோட்டின் ஓரமாகதிருப்பினார்.
இதனால் ரோட்டின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது பஸ் மோதி, அருகில் இருந்த வீட்டுக்குள் புகுந்தது.இச்சம்பவத்தில் வீட்டிற்கு அருகே நின்றிருந்த கஸ்தூரி என்பவர் உடல் நசுங்கி இறந்தார்.
மேலும் வீட்டில் இருந்த கோமதி (50), பவித்ரா (6) மற்றும் பஸ்ஸில் பயணம் செய்த கண்ணதாசன் (25), கண்டக்டர்மருதமுத்து (42) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்த 4 பேரும் திண்டுக்கல் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications