அரசியல் ஆதாயம் தேடுகிறார் கருணாநிதி: அதிமுக குற்றச்சாட்டு
சென்னை:
அரசியல் ஆதாயத்திற்காக அதிமுக அரசுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருகிறது என்று அதிமுக மகளிர் அணிகடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக மாநில மகளிர் அணியின் சார்பில் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர்களின் கூட்டம் கட்சித்தலைமையகத்தில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு மாநில மகளிர் அணித் தலைவியும், எம்.பியுமானகோகுல இந்திரா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அவைத் தலைவர் புலமைப்பித்தன், அமைச்சர் தம்பித்துரை, தலைமை நிலையச் செயலாளர்செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். 51 மாவட்ட மகளிர் அணி செயலாளர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய கோகுல இந்திரா கூறியதாவது:
அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கருணாநிதியும், திமுகவினரும் செயல்பட்டுவருகிறார்கள். இதற்காக தேவையில்லாத விஷயங்களைக் கூட பெரிதுபடுத்தி அதிமுக அரசுக்கு அவதூறுகற்பிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.
திமுகவினரின் பொய்ப் பிரசாரம், குறுக்கு வழிகளையும் மீறி ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளார். இதற்காக ஜெயலலிதாவுக்கு மகளிர் அணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அதிமுகவினர்முழு மூச்சுடன் பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications