For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைதித் தூதராய் இந்தியா வந்தார் டோனி பிளேர்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த முயல்வேன் என பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்கூறினார்.

பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது மனைவி செரி பிளேருடன் ஒரு வார பயணம்மேற்கொண்டுள்ளார் டோனி பிளேர்.

நேற்றிரவு பங்களாதேஷ் சென்ற அவர் இன்று மாலை அவர் இந்தியாவின் சாப்ட்வேர் தலைநகரான பெங்களூர்வந்தார். நாளை எலெக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் மாநாட்டில் பங்கேற்கிறார். பெங்களூரில் 2 தினங்கள் தங்கியிருக்கும் அவர்ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் செல்கிறார். இதன் பின்னர் டெல்லி செல்வார்.

டோனி பிளேரின் வருகையையொட்டி பெங்களூரில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலசாலைகளில் போக்குவரத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் அவரை கர்நாடக ஆளுநர்ரமாதேவி, முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர்.

விமானத்தில் பிளேர் பேட்டி:

இந் நிலையில் லண்டனில் இருந்து விமானத்தில் கிளம்பிய அவர் உடன் வந்த நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நான் பயணம் செய்வதால் காஷ்மீர் பிரச்சனை தீரந்துவிடப் போவதில்லை. நான்என்ன பேசப் போகிறேன் என்றும் திட்டமிடவில்லை.

இரு நாடுகளும் போரைத் தவிர்த்து அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவேன். இந்தப்பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

இங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உலகின் அமைதியே பாதிக்கப்படும். இதே போலத் தான் அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ்சும் கருதுகிறார். இந்திய-பாகிஸ்தான் படைகள் குவிப்பு தொடர்பாக இருவரும்தொலைபேசியில் பேசினோம். புஷ் பெரும் கவலை தெரிவித்தார். இரு நாடுகளையும் அமைதிப்படுத்த அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளவது என முடிவெடுத்துள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X