For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசுக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தொடங்க அரசு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய பட்ட மேற்படிப்புகளைத் துவக்க அரசு முடிவுசெய்துள்ளதாக தமிழக கல்வி அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவியருக்கு இலவசசைக்கிள்களை வழங்கி அவர் பேசுகையில்,

கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளைஅரசு செய்து வருகிறது.

அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கைஎடுத்து வருகிறது.

வரும் கல்வியாண்டு முதல் 5ம் வகுப்பிலிருந்தே பொதுத் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மத்தியமதிப்பீட்டு முறையும் அமல்படுத்தப்படவுள்ளது.

இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இனிமேல் மாணவர்கள் பயமின்றி எழுதலாம் என்றார்தம்பித்துரை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X