இனிமேல் 5-ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு
சென்னை:
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 5 ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பான முடிவு வியாழக்கிழமை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும். இதுகுறித்து பன்னீர்செல்வம்கூறுகையில்,
கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் 9ம் வகுப்புவரை சாதாரணமாக படித்து வரும் மாணவன் 10ம் வகுப்பு வந்ததும் தேர்வில் வெற்றி பெற திணறும் நிலைஏற்படுகிறது.
இதைக் குறைக்கவே 9ம் வகுப்பு வரையிலும் பொதுத்தேர்வை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
9ம் வகுப்பு வரையிலும் பொதுத் தேர்வை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு ஆண்டுதோறும்கூடுதலாக ரூ. 4 கோடி செலவாகும். மாநில அளவில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications