தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் வேண்டும்: பன்னீர் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்கு விரைவில் முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்படும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இதுவரை முழு நேர ஆளுநர் கோரி எந்தகடிதமும் மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை. குடியரசுத் தினவிழாவின்போது ஆளுநர்தான் கொடியேற்ற வேண்டும்.
ஆனால் தற்போதைய ஆளுநர் ரங்கராஜன் ஆந்திர மாநலத்திலும் கொடியேற்ற வேண்டும். எனவே அதற்குள் முழுநேர ஆளுநரை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்படும்.
மலிவு விலை மது என்பதே விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதன் விலையை அதிகரிக்கமுடியாது. மலிவு விலை என்பதால் தரம் மலிவாக உள்ளதை ஏற்க முடியாது. தரம் நன்றாகவே உள்ளது என்று அவர்கூறினார்.












Click it and Unblock the Notifications