தமிழகத்தில் 40,000 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் 40,000 வங்கி ஊழியர்கள்இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை (வி.ஆர்.எஸ்.) ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி வற்புறுத்தி திணித்துவருவதை எதிர்த்து இன்று நாடு முழுவதும் 5 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்திலும் இந்த வேலை நிறுத்தத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சுமார் 40,000 வங்கி ஊழியர்கள் இன்றையவேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. அதிகாரிகள் மட்டும் பாங்க் பக்கம் தலைகாட்டியதால், வங்கிகள்அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்த வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
சென்னையில் பல இடங்களிலும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிற மாநிலங்களிலும் வங்கிப் பணிகள் பாதிப்பு:
இதற்கிடையே நாட்டின் மற்ற மாநிலங்களிலும் வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாகவங்கிப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்தன.
அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்துக்கு பெருவாரியான ஆதரவைக் கொடுத்ததால்தான்இந்த வேலை நிறுத்தம் பெரும் வெற்றி அடைந்துள்ளது என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தாரகேஸ்வர் சக்கரவர்த்தி இன்று கொல்கத்தாவில் கூறினார்.
வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டதற்கு அவர் வருத்தமும் தெரிவித்தார்.
இனிமேல் ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி சம்பந்தப்பட்ட எந்த ஆவணத்தையும் கண்டுகொள்ளப் போவதில்லைஎன்றும் இன்று மாலை நடக்கவுள்ள கூட்டத்தின்போதுமுடிவெடுக்கப்படப் போவதாகவும் சக்கரவர்த்தி கூறினார்.
ரிசர்வ் வங்கியில் பணிகள் பாதிப்பில்லை:
ஆனால் ரிசர்வ் வங்கி மட்டும் இன்று ஒழுங்காகச் செயல்பட்டது.
இந்த வங்கியின் அனைத்துக் கிளைகளின் முன்பும் மற்ற வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதிலும், ரிசர்வ்வங்கிப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications