தமிழகத்தில் 40,000 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் 40,000 வங்கி ஊழியர்கள்இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை (வி.ஆர்.எஸ்.) ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி வற்புறுத்தி திணித்துவருவதை எதிர்த்து இன்று நாடு முழுவதும் 5 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்திலும் இந்த வேலை நிறுத்தத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சுமார் 40,000 வங்கி ஊழியர்கள் இன்றையவேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. அதிகாரிகள் மட்டும் பாங்க் பக்கம் தலைகாட்டியதால், வங்கிகள்அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்த வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
சென்னையில் பல இடங்களிலும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிற மாநிலங்களிலும் வங்கிப் பணிகள் பாதிப்பு:
இதற்கிடையே நாட்டின் மற்ற மாநிலங்களிலும் வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாகவங்கிப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்தன.
அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்துக்கு பெருவாரியான ஆதரவைக் கொடுத்ததால்தான்இந்த வேலை நிறுத்தம் பெரும் வெற்றி அடைந்துள்ளது என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தாரகேஸ்வர் சக்கரவர்த்தி இன்று கொல்கத்தாவில் கூறினார்.
வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டதற்கு அவர் வருத்தமும் தெரிவித்தார்.
இனிமேல் ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி சம்பந்தப்பட்ட எந்த ஆவணத்தையும் கண்டுகொள்ளப் போவதில்லைஎன்றும் இன்று மாலை நடக்கவுள்ள கூட்டத்தின்போதுமுடிவெடுக்கப்படப் போவதாகவும் சக்கரவர்த்தி கூறினார்.
ரிசர்வ் வங்கியில் பணிகள் பாதிப்பில்லை:
ஆனால் ரிசர்வ் வங்கி மட்டும் இன்று ஒழுங்காகச் செயல்பட்டது.
இந்த வங்கியின் அனைத்துக் கிளைகளின் முன்பும் மற்ற வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதிலும், ரிசர்வ்வங்கிப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.