பாகிஸ்தானில் தலிபான் தூதர் கைது
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் தலிபான் அரசின் தூதராக இருந்த முல்லா அப்துல் சலாம் சயீபை பாகிஸ்தான் அரசு கைது செய்துசிறையில் அடைத்துள்ளது.
ஆபகானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கிய பின்னர் அப்துல் சயீப் தான் ஆப்கானிஸ்தானுக்கும்வெளியுலகுக்கும் ஒரு தொடர்பாக இருந்து வந்தார்.
உடைந்த ஆங்கிலத்தில் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வரியாகப் பேசும் அவர் உலகின் அனைத்துத்தொலைக்காட்சிகளிலும் மிக பிரபலமான நபரானார்.
தலிபான ஆட்சி தூக்கி எறியப்பட்டவுடன் சயீபை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டது.ஆனால், ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தால் தூக்கு உறுதி என்பதால், அவர் பாகிஸ்தானிலேயே தொடர்ந்துதங்கியிருந்தார். தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டும் எனக் கோரினார். ஆனால், பாகிஸ்தான் அவரதுகோரிக்கையை நிராகரித்தது.
இதையடுத்து ஒரு தனி அமைப்பைத் தொடங்க அவர் திட்டமிட்டார். ஆனால், அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை.
தொடர்ந்து பாகிஸ்தான் தங்கியிருந்த அவரை இன்று அவரது இல்லத்தில் வைத்து அரசு கைது செய்து பெஷாவர்சிறையில் அடைத்தது. பெரும் எண்ணிக்கையிலான போலீசார் அதிகாலையில் இவரது வீட்டுக்குள் நுழைந்துஇழுத்துச் சென்றனர்.
தலிபான் தலைவன் முல்லா ஒமரின் தீவிர ஆதரவாளரான இவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக் கூடும் எனத்தெரிகிறது.