பாகிஸ்தானுக்கு டோனி பிளேர் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
எந்தக் காரணத்துக்காகவும் தீவிரவாதத்தை ஆதரிக்க முடியாது என பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் கூறினார்.
இன்று காலை காத்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் தீவிரவாதிகளுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும்வித்தியாசம் இருப்பதாகக் கூறி காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற பட்டம் சூட்டினார்பாகிஸ்தான் ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்.
இதற்கு இங்கிலாந்துப் பிரதமர் டோனி பிளேர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிளேர்,
எந்தக் காரணமாக இருந்தாலும் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை ஏற்கவே முடியாது. தீவிரவாதத்தை கைவிட்டால் தான்எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும்.
காஷ்மீர் போன்ற விவகாரத்தை தீவிரவாதத்தால் தீர்த்துவிடவே முடியாது. இதை பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்கமுடியும் என்றார்.












Click it and Unblock the Notifications