இந்திய, பாக். தூதரக ஊழியர்கள் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினர்
இஸ்லாமாபாத்:
இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த 54 ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினர் 66 பேரும் பாகிஸ்தானில் இருந்துஇன்று சிறப்பு விமானத்தில் இந்தியா திரும்பினர்.
இதையடுத்து இரு நாடுகளில் இருந்தும் தலா 54 தூதரக அலுவலர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டியநிலை ஏற்பட்டது.
ஆனால், இந்தியா மீது பறக்க பாகிஸ்தான் விமானகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதே போல பாகிஸ்தான் மீதுபறக்க இந்திய விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தங்கள் நாட்டுத் தூதரக அலுவலர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் திரும்ப அழைத்து வரபாகிஸ்தான் ஏர்லைன்சும், இந்தியன் ஏர்லைன்சும் இன்று தலா ஒரு சிறப்பு விமானத்தை இயக்கின.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு இன்று இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிச் சென்றது.அங்கிருந்து 120 இந்தியத் தூதரக அதிகாரிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டுதிரும்பியது. இவர்களை இந்தியத் துணைத் தூதர் சுதிர் வழியனுப்பி வைத்தார்.
ஏற்கனவே திருப்பி அழைக்கப்பட்டுவிட்ட இந்தியத் தூதர் விஜய் நம்பியாரின் மனைவி மாலினி நம்பியாரும்இன்றைய விமானத்தில் திரும்பி வந்தார்.
அதே போல பாகிஸ்தான் ஏர்லைன்சின் ஒரு சிறப்பு விமானமும் டெல்லி வந்து தனது தூதரக அதிகாரிகள் 55பேரையும் அவர்களது குடும்பத்தினரையும் திரும்ப அழைத்துச் சென்றது. பாகிஸ்தான் இன்னும் தனது தூதரைதிரும்ப அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications