அமைதியும் வேண்டுமாம்!.. தீவிரவாதிகளுக்கும் உதவுவாராம்!: நாடகமாடிய முஷாரப்
காத்மாண்டு:
தீவிரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறிய பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப், சுதந்திரப்போராட்டத்துக்கும் தீவிரவாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறிகாஷ்மீர் தீவிரவாதிகளுக்கு தனது ஆதரவை மறைமுகமாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஒரு பிரிவினர் (காஷ்மீர் தீவிரவாதிகள்) எதற்காக தீவிரவாதத்துக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். நோய்க்குத் தான் மருந்து தர வேண்டும். அதைவிட்டுவிட்டுநோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சை தந்து பயன் இல்லை.
தீவிரவாதிளுக்கும் சுதந்திரப் போராட்டத்தினருக்கும் (காஷ்மீர் தீவிரவாதிகள்)உள்ள வித்தியாசத்தை நாம் உணரவேண்டும்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி நிலவினால்தான இந்தப் பிராந்தியத்திலும் அமைதி நிலவும்.
எனவே, இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கு திறந்த மனதுடன் என் அமைதிக் கரத்தை நீட்டுகிறேன்.
இவ்வாறு பேசிய முஷாரப் நேராக வாஜ்பாயிடம் சென்று கைகொடுத்தார்.
உலகின் முக்கிய டிவிக்களின் கேமராக்களும், பத்திரிக்ககை போட்டோகிராபர்களும் நிறைந்த இக் கூட்டத்தில்பாகிஸ்தான் அதிபர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார் என்பது இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும் தெரியும்என்பதால், உடனடியாக ஆச்சரியம் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் வாஜ்பாயும் புன்னகைத்தவாறேஎழுந்து நின்று கை கொடுத்தார்.












Click it and Unblock the Notifications