சும்மா கை குலுக்கினால் மட்டும் போதாது: வாஜ்பாய் பதிலடி
காத்மாண்டு:
சும்மா என்னிடம் வந்து கை குலுக்கினால் மட்டும் போதாது, இதை செயலிலும் பாகிஸ்தான் காட்ட வேண்டும் எனஅந் நாட்டின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபுக்கு சரியான பதிலடி தந்தார் பிரதமர் வாஜ்பாய்.
இந் நிலையில் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் தனது பேச்சை முடித்த பின் நேரடியாக பிரதமர் வாஜ்பாயிடம்சென்ற முஷாரப் அவரிடம் கை கொடுத்தார். இந்தியாவிடம் நேசக் கரம் நீட்டுகிறேன் என்று அப்போது முஷாரப்கூறினார்.
இதையடுத்து வாஜ்பாயும் எழுந்து நின்று கை குலுக்கினார்.
ஆனால், பின்னர் பேசிய வாஜ்பாய், மேடையில் வந்து கை குலுக்கினால் மட்டும் போதாது. உண்மையிலேயேஅதை செயலிலும் காட்ட வேண்டும்.
முந்தைய காலங்களில் நான் பாகிஸ்தான் அதிபரிடம் நேசக் கரம் நீட்டியபோதெல்லாம் இந்தியாவுக்கு பாகிஸ்தான்தீங்கு தான் செய்தது.
நான் லாகூருக்கு அமைதிப் பயணமாக பஸ்சில் சென்றேன். ஆனால், இதற்குப் பரிசாக பாகிஸ்தான் எங்களுக்குஎதிராக கார்கில் ஊடுருவலை நடத்தியது. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இதே காத்மாண்டு நகரில் இருந்துகடத்தியது.
பின்னர் ஆக்ரா வரச் சொல்லி முஷாரபிடம் கை குலுக்கினேன். ஆனால், இதற்குப் பரிசாக ஜம்மூ-காஷ்மீர் சட்டசபைமீதும் இப்போது இந்திய நாடாளுமன்றத்தின் மீதும் தீவிரவாதிகளை விட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆக, பல பேருக்கு முன்னால் வந்து வெறும் கையைக் குலுக்குவதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையானமனதுடன் வந்து கை குலுக்கியிருந்தால் அதை பாகிஸ்தான் செயலிலும் காட்ட வேண்டும்.
இவ்வாறு வாஜ்பாய் பதிலளித்துப் பேச இந்தியக் குழுவினர் கைகளைத் தட்டி ஆராவாரம் செய்தனர். பாகிஸ்தான்அதிபரும் அவரது குழுவினரும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தனர்.
வாஜ்பாய் மேலும் பேசுகையில், தீவிரவாதத்தை உருவாக்குவோர் அதே தீவிரவாதத்தால் தான் அழிவாகள்என்பதற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த விஷயங்கள் தான் ஒரு பாடம். இதிலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொள்வது நல்லது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான சட்டத்தை பாகிஸ்தான் போன்ற நாடுகள்நிறைவேற்றாமல் இருப்பது வருந்தத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications