தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க பிளேர் உறுதி
ஹைதராபாத்:
தீவிரவாதம் எந்த நிலையில், எந்த வடிவில் இருந்தாலும் அது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில்சந்தேகமே இல்லை என்றார் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்.
ஹைதராபாத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்திய நாடாளுமன்றத்தின் மீதும் காஷ்மீர் சட்டசபைக்கட்டடத்தின் மீதும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஹைதராபாத் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லை விரையும் பிளேர், பிரதமர்வாஜ்பாயைச் சந்தித்து இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றத்தைத் தணிக்கும் முக்கியமான பேச்சுவார்த்தைநடத்தவுள்ளார்.
மேலும் இந்திய-இங்கிலாந்துக்கு இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இரு நாட்டுப்பிரதமர்களும் "டெல்லி பிரகடன"த்தில் கையெழுத்திட உள்ளனர்.
முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிளேர் சுமார் 20 நிமிடங்கள் தனியாகப் பேச்சு நடத்தினார்.












Click it and Unblock the Notifications