சார்க் மாநாடு நிறைவு: தீவிரவாதத்துக்கு கடும் கண்டனம்
காத்மாண்டு:
தீவிரவாதத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தோடு 11வது சார்க் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை நிறைவடைந்தது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று காலை தொடங்கிய சார்க் மாநாட்டின்போது எல்லோருடைய கண்களும்இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவரையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப், காஷ்மீர் தீவிரவாதிகளை தீவிரவாதிகள்தான் என்று சொல்லவே மறுத்து விட்டார்.
அந்தத் தீவிரவாதிகள் அனைவரும் காஷ்மீருக்காகப் போராடி வரும் தியாகிகள் என்றும் அவர்கள் நடத்தி வரும்போராட்டத்துக்கும் தீவிரவாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உலகம் புரிந்துகொள்ள (?) வேண்டும் என்றும் சார்க்மாநாட்டின்போது கூறினார் முஷாரப்.
இவ்வாறு பேசியதோடு நில்லாமல், இந்தியப் பிரதமருக்கு திறந்த மனதுடன் என்னுடைய அமைதிக் கரத்தைநீட்டுகிறேன் என்று கூறி வாஜ்பாயுடன் வந்து கைகுலுக்கி பெரிய நாடகத்தையே நடத்தினார் முஷாரப்.
சும்மா கைகுலுக்கினால் மட்டும் போதாது. செயலிலும் பாகிஸ்தான் காட்ட வேண்டும் என்று அந்நாட்டுக்குவாஜ்பாய் தக்க பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை சார்க் மாநாடு நிறைவடைந்தது. அமைதியான முறையில் தீவிரவாதத்தை எதிர்த்து சார்க்உறுப்பு நாடுகள் போராட வேண்டும் என்று மாநாட்டின் நிறைவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத ரீதியிலான தீவிரவாதம் வளர்வதைத் தடுக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் தீர்மானம் ஒன்றுநிறைவேறியது.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1373வது தீர்மானத்தின்படி தீவிரவாத அமைப்புகளுக்கு நேரடியாகவோமறைமுகமாகவோ எந்த நாடும் உதவக் கூடாது என்றும் இந்த 11வது சார்க் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானில் 12வது சார்க் மாநாடு
இதற்கிடையே அடுத்த சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடைபெறும் என்று இன்றைய நிறைவு விழாவின்போதுமுஷாரப் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு (2003) இம்மாநாடு நடைபெறும் என்றும் இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்முஷாரப் கூறினார்.