வாஜ்பாய் தலைமையில் கூடியது மத்திய பாதுகாப்புக் கமிட்டி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சார்க் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம்டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு 9வது முறையாக பாதுகாப்புக் கமிட்டி இன்று(திங்கள்கிழமை) கூடியுள்ளது.
சார்க் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்கும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தாரும் சந்தித்தது குறித்தும் இக்கூட்டத்தில்விவாதிக்கப்படுகின்றன.
உள்துறை அமைச்சர் அத்வானி அமெரிக்கா செல்லவிருப்பதையடுத்து மத்தியப் பாதுகாப்பு கமிட்டி இந்த அவசரக்கூட்டத்தைக் கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications