இரட்டை வேடம் போடுகிறது பாகிஸ்தான்: ஜஸ்வந்த் சிங் ஆவேசம்
டெல்லி:
தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் ஆவேசத்துடன் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்வோம் என்று பாகிஸ்தான் இதுவரை கூறவேயில்லை.
இவ்வாறு பாகிஸ்தான் தன்னுடைய போக்கை சிறிதும் மாற்றிக் கொள்ளாத நிலையில் பேச்சுவார்த்தை குறித்துநினைத்துப் பார்க்கவே முடியாது என்றும் அவர் கூறினார்.
அதேபோல் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் என்றால் ஒரு போக்கையும் அதே தீவிரவாதம் இந்தியாவில்(முக்கியமாக காஷ்மீரில்) என்றால் முற்றிலும் வேறான போக்கையும் கடைப்பிடிக்கிறது பாகிஸ்தான் என்றும்ஜஸ்வந்த் சிங் குற்றம் சாட்டினார்.
நேற்று மாலை பூஞ்ச் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது பாகிஸ்தானுடைய ஆளில்லா உளவு விமானம்தான் என்றுஜஸ்வந்த் சிங் உறுதியாகக் கூறினார்.
அத்துமீறி இந்த உளவு விமானம் இந்திய வான்வெளியில் பறந்ததற்காக பாகிஸ்தான் மீது நடவடிக்கைஎடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதே சரியான நடவடிக்கைதான் என்றார்ஜஸ்வந்த் சிங்.
வாஜ்பாய் தலைமையில் இன்று நடந்த பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
எல்லையில் படைகளைக் குவிப்பது, சார்க் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், டோனி பிளேரின் வருகைஆகியவை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.