அத்து மீறிய பாக். உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
ஜம்மு:
இந்திய எல்லைப் பகுதியில் அத்து மீறிப் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து மாலை 3.15 மணிக்கு மீண்டும் ஒரு ஆளில்லா பாகிஸ்தான் உளவு விமானம் இந்தியப்பகுதிக்குள் நுழைந்து பறக்கத் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.
ராடார் மூலம் இதைக் கண்ட இந்திய ராணுவத்தினர் இம்முறை இதை விட்டு வைக்கவில்லை. விமான எதிர்ப்புபீரங்கிகள் மூலம் அந்த ஆளில்லா விமானத்தைச் சுட்டுத் தள்ளினர்.
அந்த விமானத்தின் சிதைந்த பகுதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விழுந்து விட்டன.
ஆனால் பாகிஸ்தான் இந்தத் தகவலை மறுத்துள்ளது. தங்களுடைய எந்த உளவு விமானமும் வீழ்த்தப்படவில்லைஎன்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதற்கிடையே இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ரிமோட்-கன்ட்ரோல் மூலம் இயங்கக் கூடிய ஒரு விமானம்சட்டா பகுதியில் நொறுங்கி விழுந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்புஅதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications