தாயைக் கொடுமைப்படுத்திய தந்தையை அடித்துக் கொன்ற மகன்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தாயைக் கொடுமைப்படுத்திய தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார்தேடிவருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் இடும்பவனத்தைச் சேர்ந்த கணேசன் (43), இவர் விவசாய கூலி வேலையும், தேங்காய் வாங்கிபக்கத்து கிராமங்களில் விற்பனை செய்தும் வந்தார்.

இவருக்கு ஜானகி, காந்தி என்று இரண்டு மனைவிகள். இவர்கள் இருவரும் அக்கா, தங்கை. மூத்த மனைவிஜானகிக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இல்லை.

கணேசன் தினமும் குடித்து விட்டு தினமும் ஜானகியை அடிப்பதும், துன்புறுத்துவதுமாக இருந்தார். இதனால்ஆத்திரம் அடைந்த ஜானகி இரண்டாவது மகனுடன் கற்பகநாதர் குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சம்பவத்தன்று கணேசன் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு ஜானகியை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.ஜானகி வர மறுத்ததால், கணேசன் தகராறு செய்துள்ளார்.

இதைப்பார்த்த மகன் மகேந்திரன் (20) பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து கணேசனை சரமாரியாகத்தாக்கியுள்ளார்.

இதனால் அதே இடத்தில் கணேசன் துடிதுடித்து இறந்து விட்டார். எனவே ஜானகி முத்துப்பேட்டை போலீசில் புகார்செய்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்துகெலை செய்த மகேந்திரனை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+