அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்த பின்லாந்து ரூ.86 கோடி உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு பொது மருத்துவமனைகளில் பின்லாந்து நாட்டின் உதவியுடன் ரூ.86 கோடி மதிப்பில் மாநில அரசுமேற்கொள்ளவுள்ள திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செம்மலை இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பின்லாந்து நாட்டின் உதவியுடன் ரூ.86 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்படி மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நவீன வசதிகளைக் கொண்டதாக மாற்றப்படும்.இந்த நிதி வந்த பின் மேம்பாட்டுத் திட்டம் துவங்கும்.
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 556 மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்கத் தேர்வு நடந்துள்ளது.
மூப்பு அடிப்படையின் படி இந்த நியமனம் நடைபெறும் என்றார் செம்மலை.












Click it and Unblock the Notifications