புலிகள் மீதான தடை விலகுமா? - மத்திய அரசு முடிவெடுக்கும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான நார்வே நாட்டு தூதுக்குழு நடத்தும் பேச்சவார்த்தையை, இந்தியாவில் நடத்த மத்தியஅரசு உதவ வேண்டும் என்றும், அதனால் இங்கு விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என்றும்விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன

இந்நிலையில் சென்னையில் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்க மத்திய அரசு தான் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

1983ல் இந்திய அரசும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டது. அப்போது அவர்கள் இந்தியாவில்இருக்க அனுமதியும் அளிக்கப்பட்டது என்று கூறினார் கருணாநிதி.

"இந்த விஷயத்தில் உங்கள் கருத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவீர்களா?" என்று கேட்டதற்கு, "இதுவரைஇதுகுறித்து மத்திய அரசு என்னிடம் எதுவும் கேட்கவில்லை, அவர்கள் கேட்டால் நான் என் கருத்தைச் சொல்வேன்"என்று கருணாநிதி கூறினார்.

"விடுதலைப்புலிகளின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கிறதா?" என்று கேட்டதற்கு, "இப்போது இருக்கும்சூழ்நிலையில் அவர்கள் மாறியதாகத்தான் தெரிகிறது" என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+