தமிழகத்தில் மழை தொடரும்
சென்னை:
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. வட வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழி உருவாகி அங்கேயே நிலை கொண்டுள்ளதால் இந்த கன மழை பெய்துவருவதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இந்த மழை காரணமாக சென்னை நகரில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மார்கழி மாதத்தையும்மழை பெய்யும் மாதமாக மாற்றி விட்ட இந்த மழை காரணமாக நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக பெய்து வந்த மழையால் பள்ளமான பகுதிகளில் தேங்கியிருந்த நீரே இன்னும்வெளியேறாத நிலையில் மீண்டும் மீண்டும் மழை பெய்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
உடைந்து, பெயர்ந்து போன சாலைகள் தற்போது நடக்கக் கூட உபயோகமற்றதாகி விட்டன.
இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications