பொங்கலை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக நாகர்கோவில்,திருவனந்தபுரத்திற்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது.
பொங்கல் பண்டிகையை மற்றும் சபரிமலை மகா தீபத்தையொட்டி பயணிகள் நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்குரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கும் இந்தசிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 11ம் தேதி இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் (675)புறப்படுகிறது. மேலும் வரும் 13ம் தேதி காலை 7.45 மணிக்கு சிறப்பு ரயில் (677) நாகர்கோவிலுக்குப்புறப்படுகிறது.
இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு 11ம் தேதி இரவு 11.45 மணிக்குசிறப்பு ரயில் (613) புறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து 12ம் தேதி இரவு 8 மணிக்கு சென்னைக்கு சிறப்புரயில் (614 ) புறப்படுகிறது.
திருநெல்வேலியிலிருந்து 11ம் தேதி இரவு 8.45 மணிக்கு சென்னைக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படுகிறது.












Click it and Unblock the Notifications